
பாஹி கஜானன தீனாவனா
சிந்துர வதனா ஸ்ரித ஜன பாலன
அம்பிகதனயா அமராதீஸ்வர
அகணித குணகண ஆனந்த தாயக (பாஹி)
ஏழை எளியவர்களைக் காப்பவனே யானை முகனே. என்னையும் காப்பாய். சிவந்த சிந்துரம் போன்ற முகத்தை உடையவனே. சரணடைந்தவர்களைப் பாதுகாப்பவனே. அம்பிகையின் மைந்தனே. என்றும் வாழும் அமரர்களின் இறைவனே. எண்ணற்ற நற்குணங்களின் இருப்பிடமே. இன்பம் அருள்பவனே. அடியேனைக் காப்பாய்.
1 comment:
Even though I dont understand what you wrote, i wanted to say the picture is good.
Post a Comment