Saturday, December 30, 2006



ஆஜானுபாஹும் அரவிந்த நேத்ரம்
ஆத்மாபிராமம் மனஸாஸ்மராமி (2)
பூலோக வைகுண்ட பர்த்தி நிவாஸம்
ப்ரபு சாயிராமம் மனஸாஸ்மராமி (2)

ஒரே நேரத்தில் நல்லவர்களைக் காத்தும் அல்லவர்களை அழித்தும் அருள் செய்யும் திரண்ட புஜங்களை உடையவனே. அனைவரையும் கருணையுடன் நோக்கி அருளும் தாமரைக் கண்களை உடையவனே. எல்லோருடைய இருதயத்திலும் அந்தர்யாமியாய் நின்று ஆனந்தம் அருளும் இராமனே. உன்னை என்றும் என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன்.

பூலோக வைகுண்டமாம் புட்டபர்த்தியில் வாழ்பவனே. என் தலைவனான சாயிராமனே. உன்னை என்றும் என் மனத்தில் வைத்து தியானிக்கிறேன்.