Saturday, December 30, 2006

வணக்கம்

அன்பு தமிழ்மக்களே. அன்பு சாயிபக்தர்களே. எத்தனையோ வலைப்பக்கங்கள் சாயிபஜனைகளுடன் இருக்கின்றன. அவற்றில் சில அர்த்தமும் சொல்கின்றன. கடவுளின் பல்வேறு நாமங்களையும் குணங்களையும் சாயிபஜனைகளுக்குப் பொருள் சொல்லுவதன் மூலம் அனுபவிப்பதற்காக நான் இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன். சாயிபக்தர்களும் மற்றவர்களும் இந்த வலைப்பதிவிற்கு வந்து இறைவனின் நாமங்களையும் குணங்களையும் படித்தும் பாடியும் கேட்டும் அனுபவிக்கலாம். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி சுவாமியின் மலர்ப்பாதங்களை வணங்கித் தொடங்குகிறேன்.

அன்பன்,
ஒரு சாயிபக்தன்

No comments: